Saturday 23 January 2010

விபரீத வியாபாரமும் மனசாட்சியில்லாத வியாபாரிகளும்

ஒரு மளிகை கடை வியாபாரி செய்த விபரீத செயல். அவரது கடையில் எலி தொல்லை அதிகம். அதனால் கேழ்வரகு சேமியா பாக்கட்டுகளை எலி கடித்து நாசம் செய்துவிட்டது. மொத்தம் 10 க்கும் மேற்பட்ட பாக்கெட்டுக்களை கடித்து சிதைத்து விட்டது. அவர் எல்லா பாக்கட்களையும் பிரித்து போட்டு சுத்தம் செய்து மறுபடியும் எடை போட்டு சாதா கவர்களில் 200 கிராம் பாக்கட் போட்டு நல்ல விலைக்கு விற்றுவிட்டார். இப்படியும் வியாபாரிகள் இருக்கிறார்கள். எலிகடித்த சேமியா உடம்புக்கு நோய் உண்டாக்கும் என்று ஏன்தான் இவார்களுக்கு புரியவில்லையோ.


சரி இனிமேல் அவரது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பார்ப்போம்.

அவரது ஜாதகத்தில் 4மிடத்தின் அதிபதி செல்வாய் (பாப கிரகம்) 10ல் இருக்கிறது். 10மிடம் தொழில் ஸ்தானம் ஆகும். 4மிடம் சுப கிரகங்கிளின் தொடர்பு இருந்தால் மட்டுமே ஈவு இரக்கம் கருணை மனப்பான்மை இருக்கும் அப்படி இல்லைடியன்றால் அவர்கள் கடின மனப்பான்மை உள்ளவாகள்தான். அடுத்து 6மிடத்து அதிபதி 12ல் 8மிடஅதிபதியுடன் சேர்ந்துள்ளது. 12மிட அதிபதியோ 10மிடத்துடன் தொடர்பு கொண்டுருக்கிறது 6க்குரியவன் 12ல் இருந்தால் எதிரிகளால் விரயம் ஏற்படும் அதன்படி எலிகளால் விரயம் ஏற்பட்டது. 8க்கும் 10க்கும் தொடர்பானால் குறுக்கு வழியில் பணம் சோர்பார்கள். அவரது ஜாதகத்தில் 8க்கும் 10க்கும் மான தொடர்புடன் 6,12ம் சம்பத்தப்பட்டுள்ளதால் எதிரிகளால் ஏற்பட்ட விரயத்தை குறுக்கு வழியில் பணமாக மாற்றிவிட்டார்.. மேலும் இவருக்கு 6மிடத்து அதிபதியும் 8மிடத்து அதிபதியும் 12ல் உள்ளதால் விபரீத ராஜ யோகமும் உண்டு.

0 comments:

Post a Comment